Monday, December 17, 2012

அடிமேல் அடி


அடிமேல் அடி

அடிநோகச் சென்றென் அலுவ லகத்தில்

அடிக்கத் தொடங்கி அலுத்ததட் டச்சில்

அடிக்(கு)அடி வந்துதித்த ஆயிரம் தப்பால்

அடியி லிருந்துபின்னும் ஆரம்பித் தாங்கே

அடிக்கடி அந்தத் தொலைபேசி ஓங்கி

அடிக்க அதைஎறியக் கைநீட்டும் வேளை

அடிநாள் நண்பன் அரட்டைக் கழைத்தான்

அடிசக்கை! என்றுநான் அக்கணமே என்றன்

அடிமனத்தில் ஆனந்தம் பொங்கிவர வம்புக்(கு)

அடிபோட்டுப் பெண்களுடன் அந்நாளில் நான் கூத்(து)

அடித்த கதையை அவனிடம் பீற்ற

அடியேன் மனைவிக்(கு) அவன்அதைச் சொல்ல

அடியோ அடிஎனக்(கு) அன்று!
 
 


(இக்கவிதை, ‘ஒருவிகற்பப் பஃறொடை இன்னிசை வெண்பா’ என்னும் மரபுச் செய்யுள் பாடலின் இலக்கணம் அமைந்தது)
..அனந்த் மார்ச் 2006
 

No comments:

Post a Comment